Showing posts with label Poem. Show all posts
Showing posts with label Poem. Show all posts

Sunday, 21 February 2010

God / a poem

எல்லோரையும் எதிர்த்தேன்
கடவுள் என் பக்கம் என்று,
பிறகுதான் தெறிந்தது
அவர் எல்லோர்பக்கமும்
என்று,
கடைசியில் தான் தெரிந்து
கொண்டேன்
அவர்தான் எல்லோரும்
என்று .

உத்தமன்

Thursday, 18 February 2010

Nagulan's poem

நகுலன் நன்றி: 'ழ' இலக்கிய இதழ்

நான்


எனக்கு யாருமில்லை
நான்
கூட...
இவ்வளவு பெரிய
வீட்டில்
எனக்கு இடமில்லை
இவ்வளவு
பெரிய நகரத்தில்
அறிந்த முகம் ஏதுமில்லை
அறிந்த முகம் கூட
மேற் பூச்சுக் கலைய
அந்நியமாக
உருக்காட்டி
மறைகிறது
என்னுருவங்
கலைய
எவ்வளவு
காலம்
கடந்து செல்ல வேண்டும்
என்ற நினைவுவர
''சற்றே நகர்''
என்று ஒரு குரல் கூறும்.

Writer Nagulan, who is no more, worked as English professor in Kerala, Trivandrum, prolifically wrote stories,essays,poems, a genius who was not recognized to the extent he deserves.The above poem is one written by him.